sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அம்பேத்கர் பிறந்தநாள் பேனர் கிழிப்புஆத்துார் பிரதான சாலையில் மறியல்

/

அம்பேத்கர் பிறந்தநாள் பேனர் கிழிப்புஆத்துார் பிரதான சாலையில் மறியல்

அம்பேத்கர் பிறந்தநாள் பேனர் கிழிப்புஆத்துார் பிரதான சாலையில் மறியல்

அம்பேத்கர் பிறந்தநாள் பேனர் கிழிப்புஆத்துார் பிரதான சாலையில் மறியல்


ADDED : ஏப் 15, 2025 01:56 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பேத்கர் பிறந்தநாள் பேனர் கிழிப்புஆத்துார் பிரதான சாலையில் மறியல்

நாமகிரிப்பேட்டை:அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட பேனரை கிழித்ததால், இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரம் பஸ் ஸ்டாண்டில், பொதுமக்கள் சார்பில் அம்பேத்கர் படத்துடன் பிறந்தநாள் பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை, பிறந்தநாள் கொண்டாட வந்த பொதுமக்கள், அம்பேத்கர் பேனர் கிழிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, அம்பேத்கரின் பேனரை கிழித்த நபர்களை, உடனடியாக கைது செய்யக்கோரி, 50க்கு மேற்பட்டோர், ஆத்துார் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மங்களபரம் போலீசார், சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போலீசாருக்கும், சாலை

மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேனரை கிழித்தவர்கள் மீது

நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் அளித்த புகார்படி, மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, பேனரை கிழித்தவரை தேடி வருகின்றனர். திடீரென நடந்த சாலை மறியலால், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us