sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலீசாரிடம் வாக்குவாதம் செய்த 5 பேர் கைது

/

போலீசாரிடம் வாக்குவாதம் செய்த 5 பேர் கைது

போலீசாரிடம் வாக்குவாதம் செய்த 5 பேர் கைது

போலீசாரிடம் வாக்குவாதம் செய்த 5 பேர் கைது


ADDED : பிப் 05, 2025 01:32 AM

Google News

ADDED : பிப் 05, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போலீசாரிடம் வாக்குவாதம் செய்த 5 பேர் கைது

சேலம்,: சேலம், அம்மாபேட்டையில் அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை, பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அதன் நிர்வாகிகள் விஜயபானு, 49, உள்பட, 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் அறக்கட்டளைக்கு ஆதரவாகவும், போலீசாருக்கு எதிராகவும் துண்டறிக்கை வெளியிட்டு, அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் அம்பேத்கர், 55, போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அவர் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிந்த சேலம் டவுன் போலீசார், போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனர்.

மீறி அவர் உள்பட பலர், நேற்று காலை, சேலம் கோட்டை மைதானத்தில், விஜயபானுவை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அம்பேத்கர், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு சென்றார். ஆனால் அறக்கட்டளை ஏஜன்ட்கள் உள்ளிட்டோர், மறியலுக்கு முயன்றனர். இதில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த, தர்மபுரி, பாலக்காட்டை சேர்ந்த சீனிவாசன், 54, சுகந்தி தேவி, 34, சேலம், அம்மாபேட்டை பாஸ்கர், 36, செல்வம், 56, பரணி, 45, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். இதனால் போராட்டக்காரர்கள், மதியம், 1:00 மணிக்கு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us