/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் 'குளுகுளு' சூழல் சுற்றுலா பயணியர் குதுாகலம்
/
ஏற்காட்டில் 'குளுகுளு' சூழல் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ஏற்காட்டில் 'குளுகுளு' சூழல் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ஏற்காட்டில் 'குளுகுளு' சூழல் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ADDED : மார் 02, 2025 07:05 AM
ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சில நாட்களாக வெப்பம் அதிக-ரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணியர் சிரமத்துக்கு ஆளாகினர். ஆனால் நேற்று அதிகாலை முதல், காலை, 7:00 மணி வரை, ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளி-ருடன் கூடிய பனிமூட்டம் சூழ்ந்து, சாரல் மழை பெய்தது. மழை நின்ற பின்பும், 11:00 மணி வரை, பனிமூட்டம் காணப்பட்டது.
இதனால் சாலைகளில், 5 அடி துாரத்தில் செல்லும் வாகனங்கள் கூட தெரியாமல் மக்கள் மெதுவாக ஓட்டிச்சென்றனர். ஆனால் சுற்றுலா பயணியர், பனிமூட்டத்தை கண்டு ரசித்தும், புகைப்-படம் எடுத்தும் மகிழ்ந்தனர். குறிப்பாக ஏரிக்கரையோர திட்டு-களில் அமர்ந்தபடி, ஏரி அழகை ரசித்து பார்த்தனர்.