/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தீரன் நினைவு தினத்தில் விதிமீறினால் நடவடிக்கை'
/
'தீரன் நினைவு தினத்தில் விதிமீறினால் நடவடிக்கை'
ADDED : ஜூலை 24, 2024 07:46 AM
சங்ககிரி : சங்ககிரியில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆக., 3ல் அனுசரிக்கப்பட உள்ளது. இதில் பங்-கேற்போருக்கான விதிமுறைகள், சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல் குறித்த ஆலோசனை கூட்டம், சங்ககிரி, ஆர்.டி.ஓ., அலுவல-கத்தில் நேற்று நடந்தது. அதற்கு தலைமை வகித்து ஆர்.டி.ஓ., லோகநாயகி பேசியதாவது:
பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உள்ள நினைவு சின்னத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். நினைவிடத்தில் போட்டோ, இதர பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. அவரவர்-களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நிகழ்ச்சியை முடித்து குறிப்-பிட்ட நேரத்தில் கலைந்து செல்ல வேண்டும். பழைய இடைப்-பாடி சாலை வழியே வாகனங்கள் செல்லக்கூடாது. தனிநபர் யாரையும் தாக்கி பேசவோ, முழக்கம் செய்யவோ, அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்படி பேசவோ கூடாது. 25க்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும். விதிமீ-றுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டி.எஸ்.பி., ராஜா, தாசில்தார் வாசுகி உள்ளிட்ட அதிகாரிகள், பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.