/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொளத்துார் வட்டாரத்தில் மக்காச்சோள சாகுபடி அதிகரிப்பு
/
கொளத்துார் வட்டாரத்தில் மக்காச்சோள சாகுபடி அதிகரிப்பு
கொளத்துார் வட்டாரத்தில் மக்காச்சோள சாகுபடி அதிகரிப்பு
கொளத்துார் வட்டாரத்தில் மக்காச்சோள சாகுபடி அதிகரிப்பு
ADDED : ஆக 25, 2024 07:03 AM
மேட்டூர்: கொளத்துார் வட்டாரத்தில், 14 ஊராட்சிகளில் கடந்த இரு மாதங்-களில், போதிய அளவில் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் நிலத்தை உழுது பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக விவசாயிகள், 10 மாதங்களில் பலன் தரும் மரவள்ளி கிழங்கு, 500 ஏக்கருக்கு மேலும், 90 நாட்கள் வளரும் வேர்க்க-டலை செடிகள், 2,258 ஏக்கரிலும் சாகுபடி செய்துள்ளனர். தவிர, 105 முதல், 110 நாட்களில் பலன் தரும் மக்காச்சோளம், 2,250 ஏக்கரிலும், கால்நடை தீவனமாக அவ்வப்போது அறுவடை செய்யும் மக்காச்சோள பயிர்கள், 2,843 ஏக்கரிலும் சாகுபடி செய்-துள்ளனர்.
இதுகுறித்து கொளத்துார் வட்டார வேளாண் அலுவலர்கள் கூறு-கையில், 'கொளத்துார் சுற்றுப்பகுதியில் சாகுபடி செய்துள்ள மக்-காச்சோளத்தில், 75 சதவீதம் கால்நடைகளுக்கும், மீதி, 25 சத-வீதம் தானியத்துக்கும் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
கொளத்துார் வட்டாரத்தில் சமீபகாலமாக இதர பயிர்களை விட மக்காச்சோள சாகுபடி அதிகரித்து வருகிறது. மேலும் அதன் கொள்முதல் விலை அதிகரித்துள்ளது, சாகுபடிக்கு முக்கிய காரணம்' என்றனர்.

