/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மன நிறைவும் மன மகிழ்ச்சியும்' நாளை ஆன்மிக சொற்பொழிவு
/
'மன நிறைவும் மன மகிழ்ச்சியும்' நாளை ஆன்மிக சொற்பொழிவு
'மன நிறைவும் மன மகிழ்ச்சியும்' நாளை ஆன்மிக சொற்பொழிவு
'மன நிறைவும் மன மகிழ்ச்சியும்' நாளை ஆன்மிக சொற்பொழிவு
ADDED : ஆக 04, 2024 01:15 AM
சேலம், சேலம், தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், காளியம்மன் பண்டிகையை முன்னிட்டு, தாதகாப்பட்டி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அறிவுத்திருக்கோவில் யோகா, ஆன்மிக கல்வி மையம் சார்பில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, நாளை மாலை, 5:30 முதல், 7:00 மணி வரை நடக்க உள்ளது.
இதில் முதுநிலை வக்கீல்(துணை நிர்வாக வளர்ச்சி) பொன்முடி தலைமையில் நிர்வாக அறங்காவலர் சண்முகம், நிர்வாகி சம்பத் முன்னிலையில், செயலர் பரமசிவம் வரவேற்புரை வழங்க உள்ளார். பேராசிரியர் மன்ற நிறுவனர் பழனிசாமி அறிமுக உரையாற்றுகிறார்.
அயோத்தியாப்பட்டணம் மனவளக்கலை மன்ற பேராசிரியர் ராஜேந்திரன், 'மன நிறைவும் மன மகிழ்ச்சியும்' தலைப்பில் பேசுகிறார். கொண்டாலாம்பட்டி மண்டல தலைவர் அசோகன் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.