ADDED : மே 29, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆட்டையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி, ராசிபுரம் பிரதான சாலையில், திருமணி முத்தாற்றங்கரையில் உள்ள துாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு, நேற்று முன்தினம் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
நேற்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. தொடர்ந்து தீர்த்த கும்பங்களை வேதவிற்பனர்கள் சுமந்து, கோபுரத்துக்கு சென்று புனித தீர்த்தங்களை ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்திவைத்தனர். பின் கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.