ADDED : செப் 12, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே நெய்யமலையை சேர்ந்த பூபாலன் மகன் காமேஷ்வரன், 9, முருகேசன் மகன் சின்னதுரை, 9. இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், 4ம் வகுப்பு படித்தனர். நேற்று மாலை, 4:30 மணிக்கு பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்றபோது, வழியில் உள்ள பழனிசாமி என்-பவரது விவசாய கிணற்றில், இரு மாணவர்களும் குளித்தனர்.
15 அடி ஆழ கிணற்றில் குளித்த அவர்களுக்கு சரிவர நீச்சல் தெரி-யாமல் மூழ்கினர். இதை பார்த்த சக மாணவர்கள், வீட்டுக்கு சென்று தகவல் கொடுத்தனர். மாணவர்களது பெற்றோர், உறவி-னர்கள், கிணற்றில் இறங்கி தேடினர். ஆனால் காமேஷ்வரன், சின்-னதுரை இறந்த நிலையில் உடல்களை மீட்டனர். ஏத்தாப்பூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.