/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று 16,092 அலுவலருக்கு 2ம் கட்ட பயிற்சி
/
இன்று 16,092 அலுவலருக்கு 2ம் கட்ட பயிற்சி
ADDED : ஏப் 07, 2024 03:35 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலையொட்டி, 3,257 ஓட்டுச்
சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பணியாற்ற 13,410 அலுவலர்கள், கூடுதலாக மாற்று அலுவலர்கள், 2,682 பேர் என, 16,092 அலுவலர்கள் ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ளனர்.
அவர்கள் சட்டசபை தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த, 24ல் முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு வராத, 1,760 பேருக்கு விளக்கம் கேட்டு மெமோ வழங்கப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு, 31ல் பயிற்சி அளிக்கப்பட்டது.
இன்று, 2ம் கட்ட பயிற்சி வகுப்பு நடக்கிறது. சேலம் லோக்சபா தொகுதியில் 8,241 அலுவலர்கள் பயிற்சி பெறுகின்றனர். சட்டசபை தொகுதி வாரியாக பயிற்சி நடக்கிறது. சேலம் மேற்கில், 1,179 அலுவலருக்கு, சேலம் சோனா தொழில்நுட்ப கல்லுாரியில் நடக்கிறது.
வடக்கு தொகுதியில், 1,267 அலுவலருக்கு ஜெய்ராம் கல்லுாரி; தெற்கு தொகுதியில், 998 அலுவலருக்கு, அம்மாபேட்டை சக்தி கைலாஷ் கல்லுாரி; வீரபாண்டி தொகுதியில், 1,318 அலுவலருக்கு பெரிய சீரகாபாடி, விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லுாரி; ஓமலுார் தொகுதியில், 1,813 அலுவலருக்கு, பத்மவாணி கல்லுாரி; இடைப்பாடி தொகுதியில், 1,666 அலுவலருக்கு கொங்கணாபுரம், ஏ.ஜி.என்., மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடக்கிறது.
காலை, 10:00 மணிக்கு தொடங்கி, மாலை வரை பயிற்சி நடக்கிறது.

