sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரசாயன உர பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு

/

ரசாயன உர பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு

ரசாயன உர பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு

ரசாயன உர பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு


ADDED : ஜூலை 01, 2024 03:39 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண் துறை சார்பில், ரசாயன உர பயன்பாடு குறைத்தல் குறித்து விழிப்புணர்வு முகாம் புத்துார் அக்ரஹாரத்தில் நேற்று நடத்தப்பட்டது. உதவி இயக்குனர் கிரிஜா தலைமை வகித்து, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். முகாம் நோக்கம் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன் பேசினார்.

தொடர்ந்து ஓய்வு பெற்ற துணை வேளாண் அலுவலர் பழனிசாமி, அறுவடை முடிந்த பின் சில மாதங்களுக்கு பயிர் சாகுபடி செய்யாமல் விட்டு வளர்ந்த செடிகளை மடக்கி உழுது மண்ணை வளப்படுத்தி பின் சாகுபடி செய்ய அறிவுறுத்தினார்.

துணை வேளாண் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ட்ரைக்கோடெர்மாவிரிடி கொண்டு சோளம் விதை நேர்த்தி செயல்முறை விளக்கம் அளித்தார். வேளாண் வணிக உதவி வேளாண் அலுவலர் நடராஜன், உதவி தோட்டக்கலை அலுவலர் ராமசாமி ஆகியோரும், மானிய திட்டங்களை விளக்கினர். 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us