sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பி.எட்., மாணவர் 3 பேர் வருகை பதிவேட்டில் மோசடி? விசாரிக்க சி.இ.ஓ., உத்தரவு

/

பி.எட்., மாணவர் 3 பேர் வருகை பதிவேட்டில் மோசடி? விசாரிக்க சி.இ.ஓ., உத்தரவு

பி.எட்., மாணவர் 3 பேர் வருகை பதிவேட்டில் மோசடி? விசாரிக்க சி.இ.ஓ., உத்தரவு

பி.எட்., மாணவர் 3 பேர் வருகை பதிவேட்டில் மோசடி? விசாரிக்க சி.இ.ஓ., உத்தரவு


ADDED : ஏப் 01, 2024 04:12 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: இடைப்பாடி, பூலாம்பட்டி அருகே தனியார் கல்வியியல் கல்லுாரி உள்ளது. அங்குள்ள மாணவர்கள், 80 நாட்கள் கற்றல், கற்பித்தல் பயிற்சிக்கு, கடந்த செப்டம்பரில், பல்வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். அதில், பி.எட்., மாணவர், 16 பேருக்கு, இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 3 பேர் முறையாக பயிற்சிக்கு வரவில்லை என புகார் எழுந்தது.

ஆனால் பள்ளி ஆசிரியர்கள், பயிற்சி முடியும்போது, ஏற்கனவே அவர்கள் கையெழுத்திட்ட வருகைப்பதிவேட்டை பெற்றுக்கொண்டனர். பின் புதிதாக ஒரு வருகை பதிவேட்டை வழங்கியுள்ளனர். அதில் பயிற்சிக்கு வராத, 3 பேரின் கையெழுத்து இருந்தது. அத்துடன், 13 பேரையும் மீண்டும் புதிதாக, 80 நாட்களுக்கு கையெழுத்திட அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வரின் தனி பிரிவுக்கு புகார் சென்றது. அதனால் வருகை பதிவேட்டில் கையெழுத்து மோசடி நடந்துள்ளதா என விசாரிக்க, சி.இ.ஓ., கபீர், சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் கோபாலப்பாவை(இடைநிலை) நியமித்துள்ளார். அவரது விசாரணை முடிவில் உண்மை தெரியவரும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us