sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மழையில் செடிகளுக்கு உயிர் உரங்கள்

/

மழையில் செடிகளுக்கு உயிர் உரங்கள்

மழையில் செடிகளுக்கு உயிர் உரங்கள்

மழையில் செடிகளுக்கு உயிர் உரங்கள்


ADDED : மே 19, 2024 02:30 AM

Google News

ADDED : மே 19, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 10,000 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களான அரளி, மல்லிகை, நத்தியாவட்டை, இட்லி பூ, கொய்யா, மா, பாக்கு, தென்னை, வாழை, காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது மழை பெய்து வருவதால் விவசாயிகளுக்கு பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல் கூறியதாவது:

மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும். வயலில் உள்ள செடிகளுக்கு, மட்கிய தொழு உரத்துடன் அசடோபேக்டர், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, பேசில்லஸ் மற்றும் வேம் ஆகிய உயிர் உரங்களை கலந்து செடிகளுக்கு இட்டு மண் அணைக்க வேண்டும்.

செடிகளை சுற்றி மழைநீர் தேங்கும்படி வட்ட பாத்தி அமைக்க வேண்டும். வயலில் தண்ணீர் தேங்க, வரப்புகளை உயர்த்தி கட்ட வேண்டும். அதிக அளவு தண்ணீர் தேங்காமல் வெளியேற, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us