/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முழு சம்பளத்தை வழங்குவதில்லை 'துாய்மை இந்தியா' பணியாளர்கள் புகார்
/
முழு சம்பளத்தை வழங்குவதில்லை 'துாய்மை இந்தியா' பணியாளர்கள் புகார்
முழு சம்பளத்தை வழங்குவதில்லை 'துாய்மை இந்தியா' பணியாளர்கள் புகார்
முழு சம்பளத்தை வழங்குவதில்லை 'துாய்மை இந்தியா' பணியாளர்கள் புகார்
ADDED : ஆக 09, 2024 02:25 AM
சேலம்: சேலம் மண்டல, துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சார்பில், 100க்கும் மேற்பட்டோர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
சேலம் மண்டல, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் கட்டுப்-பாட்டில் உள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில், 16 நகராட்சிகளில், 2017 அக்டோபர் முதல், துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் மற்றும் மேற்பார்வை-யாளர்களாக, 'லிபி இன்டீரியர்' நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்-படையில் பணிபுரிகிறோம்.
இந்நிறுவனத்துக்கு வைப்பு தொகையாக ஒரு மாத சம்பளம் வழங்கியுள்ளோம். பணி உத்தரவில் மேற்பார்வையாளருக்கு, 21,118, பரப்புரையாளர்களுக்கு, 16,817 என குறிப்பிட்டுள்ள நிலையில், முழு ஊதியத்தை வழங்காமல், மாதம், 12,500, 9,200ம் ஊதியமாக வழங்குகின்றனர். இ.எஸ்.ஐ., பி.எப்., ஆகிய-வையும் மாதந்தோறும் வரவு வைப்பதில்லை. சம்பளம் முழுமை-யாக தரவும், பி.எப்., பணத்தை நிறுவனம் உடனே செலுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.