/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பூட்டிய வீட்டில் இரும்பு கடைக்காரர் சடலமாக மீட்பு
/
பூட்டிய வீட்டில் இரும்பு கடைக்காரர் சடலமாக மீட்பு
ADDED : ஜூன் 07, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,;சேலம், திருவாக்கவுண்டனுார், பண்டக்கார வட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி, 58.
அதே பகுதியில் பழைய இரும்பு கடை வைத்திருந்தார். அவரது இரு மனைவிகளும், கருத்து வேறுபாடால் பிரிந்து சென்ற நிலையில், வாடகை வீட்டில் தனியே வசித்தார். கடந்த, 3 நாட்களாக, அவர் வீடு திறக்கப்படவில்லை. அவரது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. சூரமங்கலம் போலீசார் வந்து பூட்டியிருந்த வீட்டை திறந்தபோது, அழுகிய நிலையில் பாலாஜி சடலம் கிடப்பது தெரிந்தது. உடல் நலக்குறைவால் இறந்தாரா, வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.