sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நலிந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

/

நலிந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

நலிந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

நலிந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 08, 2024 07:28 AM

Google News

ADDED : செப் 08, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில், விளையாட்டுத்துறையில் தேசிய, சர்வதேச போட்டிகளில் வென்று, தற்போது நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம், 6,000 ரூபாய் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி, www.sdat.tn.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

குறைந்தபட்ச தகுதி, போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான விளையாட்டு போட்டியை, மத்திய அரசால் நடத்தப்-பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு

இடையேயான போட்டி, அகில இந்திய பல்கலைக்கு இடையேயான போட்டியாக இருக்க வேண்டும்.இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட, தேசிய விளை-யாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட தேசிய,

சர்வதேச போட்டி, மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட

தேசிய, சர்வதேச போட்டியாகவும் இருக்கலாம்.விண்ணப்பதாரரின் வயது வரம்பு, 2024 ஆகஸ்டு அன்று, 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். குறிப்பாக

தமி-ழகத்தை சேர்ந்தவராகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்-கேற்றவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம், 6,000 ரூபாயாக இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான

ஓய்வூ-தியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள், இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை.

www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும், 30, மாலை, 6:00 மணிக்குள் விண்ணப்-பிக்க வேண்டும் என, கலெக்டர்

பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us