/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கும்பாபிேஷக விழாவுக்கு இன்று முகூர்த்தக்கால் நடல்
/
கும்பாபிேஷக விழாவுக்கு இன்று முகூர்த்தக்கால் நடல்
ADDED : செப் 01, 2024 03:29 AM
மகுடஞ்சாவடி: சேலம் அருகே கஞ்சமலையில் உள்ள சித்தர்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் கும்பா-பிஷேக விழாவுக்கு இன்று காலை, 9:00 முதல், 10:15 மணிக்குள் முகூர்த்தக்கால் நடப்படுகிறது.
வரும், 13 மதியம், யாகம் செய்வதற்குரிய அக்னியை சூரிய பகவான் இடத்தில் இருந்து பெறும் நிகழ்ச்சி; 14 காலை, 6:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை, 4:30 மணிக்கு லட்சுமி பூஜை, தீப பூஜை, மூலிகைகளால் யாகங்கள், 5:30 முதல், 6:20க்குள், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடக்கும். 15 காலை, 7:30 முதல், 8:00 மணிக்குள் முருகன்; 7:30 முதல், 8:15 மணிக்குள் காளியம்மன்; 10:00 முதல், 10:45க்குள் மூலவர் சித்த-ருக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்-ளனர்.