sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நகராட்சி நிர்வாக மண்டல அலுவலகம் முற்றுகை

/

நகராட்சி நிர்வாக மண்டல அலுவலகம் முற்றுகை

நகராட்சி நிர்வாக மண்டல அலுவலகம் முற்றுகை

நகராட்சி நிர்வாக மண்டல அலுவலகம் முற்றுகை


ADDED : ஜூலை 04, 2024 11:04 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 11:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், சத்திரத்தில் உள்ள நகராட்சிகளின் நிர்வாக மண்டல அலுவலகத்தை, நரசிங்கபுரம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் பலர், நேற்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து குறைந்தபட்ச ஊதியம், 628 ரூபாய் வழங்குதல்; அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணம், சீருடை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: நரசிங்கபுரம் நகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில், 18 ஆண்டுகளாக பணிபுரிகிறோம்.

முறையாக ஊதியம் வழங்காமல் உபகரணம் வழங்காமல் நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து, முற்றுகையில் ஈடுபட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us