sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வசந்த விழாவில் நந்தவன சேவை

/

சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வசந்த விழாவில் நந்தவன சேவை

சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வசந்த விழாவில் நந்தவன சேவை

சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வசந்த விழாவில் நந்தவன சேவை


ADDED : மே 30, 2024 01:04 AM

Google News

ADDED : மே 30, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி ஆனதை தொடர்ந்து பூமியை குளிர்விக்கும்படி, சிவாலயங்களில் தாராபாத்திர அபிேஷகம் செய்வது போல் விஷ்ணு ஆலயங்களில் வசந்த உற்சவம் நடத்தப்படும். அதன்படி சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 5 நாட்கள் வசந்த விழா, 14ம் ஆண்டாக நேற்று தொடங்கியது.

இதற்கு கோவிலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட சிறு தெப்பக்குளத்தில் நந்தவனம் போல் அலங்கரித்து காய்கனிகளை தொங்கவிட்டு, நடுவே அமைக்கப்பட்ட ஊஞ்சலில், தாயாருடன் பெருமாளை எழுந்தருளச்செய்து சேர்த்தி சேவையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஜூன், 2 வரை, தினமும் மாலை, சவுந்தரவல்லி தாயாருடன் சவுந்தரராஜருக்கு சேர்த்தி திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி, இசைக்கருவிகளை இசைத்து, கோலாட்டம், கோணங்கி, பரதநாட்டியம் ஆகிய நடனங்கள் ஆடி, இசையாஞ்சலி, புஷ்பாஞ்சலி, நாட்டியாஞ்சலிகளால் பெருமாளை குளிர்விக்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us