ADDED : ஆக 08, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், இடைப்பாடி, வெள்ளாளபுரம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சன்னாசி, 60.
இவர் நேற்று முன்தினம் இரவு, 8:45 மணிக்கு, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வதற்காக, பஸ் ஏற நடந்து சென்று கொண்டிருந்தார். ஜலகண்டாபும் - சின்னப்பம்பட்டி சாலையில் சின்னம்பட்டி மண் திட்டு அருகே சென்றபோது, மொபட்டில் வேகமாக வந்தவர், சன்னாசி மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த சன்னாசியை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். அவரது மனைவி பிச்சையம்மாள் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.