sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை:மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

/

மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை:மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை:மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை:மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூன் 07, 2024 02:11 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்;ஓமலுார், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே, வெப்பமின்றி குளிர்ந்த காற்று வீசியது. மாலை, 5:00 மணிக்கு சாரல் மழையாக பெய்யத்

தொடங்கியது.

தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இரவு, 7:00 மணிக்கு ஓமலுார் அரசு மருத்துவனை பிரேத பரிசோதனை கூடம் அருகே, சாலையோரம் இருந்த பழமையான புளியமரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் ஓமலுார் - மேட்டூர் சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார், மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

அதேபோல் தலைவாசல், வீரகனுார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம், 2:30 மணிக்கு இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. 2 மணி நேரம் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆத்துார், நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு, 7:00 முதல், 9:00 மணி வரை, பரவலாக மழை பெய்தது. வாழப்பாடியில் மாலை, 6:30 மணிக்கு கருமேகம் சூழ்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.






      Dinamalar
      Follow us