sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெண் போலீசிடம் ரூ.14 லட்சம் மோசடி: எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

/

பெண் போலீசிடம் ரூ.14 லட்சம் மோசடி: எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

பெண் போலீசிடம் ரூ.14 லட்சம் மோசடி: எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

பெண் போலீசிடம் ரூ.14 லட்சம் மோசடி: எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'


ADDED : மார் 02, 2025 03:11 AM

Google News

ADDED : மார் 02, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : பெண் போலீஸ் உட்பட 17 பேரிடம் ஏலச்சீட்டு மோசடியில், ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சேலம் மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ., யோகாம்பாள். இவர் கடந்த ஆண்டு மார்ச்சில், போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:

மாநகர ஆயுதப்படையில் பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ., பாஸ்கரனிடம், நான், என் உறவினர்கள் 17 பேர் சேர்ந்து, 2012 முதல் ஏலச்சீட்டில் பணம் கட்டி வந்தோம். 2019 இறுதி வரை கட்டிய, 23.70 லட்சம் ரூபாயை, பாஸ்கரன் திருப்பிக் கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும், நான்காண்டுகளாக இழுத்தடித்து வருகிறார்.

இவ்வாறு கூறியிருந்தார்.

மத்திய குற்றப்பிரிவு போலீசார், பல்வேறு கட்டங்களாக விசாரித்த நிலையில், பாஸ்கரன், 3 லட்சம் ரூபாய் கொடுத்தார். மீதி, 20.70 லட்சம் ரூபாய்க்கு பதில், 14 லட்சம் ரூபாய்தான் வழங்க வேண்டும் என, அவர் கூறியுள்ளார்.

அந்த பணத்தையும் வழங்கவில்லை. இதுகுறித்த அறிக்கை, கமிஷனரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனால், பிப்., 26ல், பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து, கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us