/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சூரிய ஒளி நிகழ்வு: 3ம் நாளும் ஏமாற்றம்
/
சூரிய ஒளி நிகழ்வு: 3ம் நாளும் ஏமாற்றம்
ADDED : பிப் 24, 2025 03:34 AM
தாரமங்கலம்: தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், பிப்., 21, 22, 23ல், கைலாசநாதர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடக்கும். ஆனால் இரு நாட்களாக சூரிய ஒளி விழாததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இறுதிநாளான நேற்று கண்டிப்பாக தென்-படும் என்ற ஆர்வத்தில், மாலை, 4:00 மணிக்கே, ஏராளமான பக்-தர்கள் காத்திருந்தனர். 6:00 மணிக்கு, கோவிலில் சூரிய ஒளி தென்பட்டதும், மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. தொடர்ந்து கருவறை உள்ளே படிக்கட்டில் ஒளி லேசாக தெரிந்-தது. அப்போது, ஒளியை காண பக்தர்கள் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால் மின்விளக்கு போடப்பட்டு, சுவா-மிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின் சூரிய ஒளியை காண முடியாத ஏமாற்றத்தில், பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

