sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'ரிசர்வ் வங்கி' பெயரில் பலரிடம் மோசடி பா.ம.க., நிர்வாகி உள்பட 2 பேர் கைது

/

'ரிசர்வ் வங்கி' பெயரில் பலரிடம் மோசடி பா.ம.க., நிர்வாகி உள்பட 2 பேர் கைது

'ரிசர்வ் வங்கி' பெயரில் பலரிடம் மோசடி பா.ம.க., நிர்வாகி உள்பட 2 பேர் கைது

'ரிசர்வ் வங்கி' பெயரில் பலரிடம் மோசடி பா.ம.க., நிர்வாகி உள்பட 2 பேர் கைது


ADDED : டிச 11, 2025 05:33 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:'ரிசர்வ் வங்கி' பெயரில், 150க்கும் மேற்பட்டோரிடம், 3.50 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், பா.ம.க., நகர செயலர் உள்பட, 2 பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்-தனர்.

சேலம், நாமக்கல், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில், ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி, பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து, 20 பேரை கைது செய்-தனர். மேலும் சிலரை தேடினர்.இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலுார், ஆர்.சி.செட்டிப்பட்-டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் பிரமுகர் செல்லதுரை, 52, ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த, பா.ம.க., நகர செயலர் தினேஷ்-குமார், 35, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் வீட்டில் சோதனை செய்து, முக்கிய ஆவ-ணங்கள், மடிக்கணினி, மொபைல் போன்களை கைப்பற்றினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'செல்லதுரை, தினேஷ்குமார் ஆகியோர், கருப்புசாமி பெயரில் அறக்கட்டளை நடத்தி, ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி இரிடியம் பெற்று தருவதாக கூறி, சேலம், தர்மபுரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், 150க்கும் மேற்பட்டோரிடம், 3.50 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்-ளனர்.

அதில், 20க்கும் மேற்பட்டோரை, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என போலி நபர்-களை காட்டி, பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.






      Dinamalar
      Follow us