ADDED : அக் 28, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த சர-ளைமேடு பகுதியில் சாராயம் விற்பதாக, மொளசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று மாலை மொளசி போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்-போது செந்தில்குமார், 39, சங்கர், 36, ஆகிய இருவரும் வீட்டில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இருவரையும் போலீசார் கைது செய்து, 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்-தனர்.