/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பணம் பறிக்க முயற்சி 3 பேருக்கு தர்ம அடி
/
பணம் பறிக்க முயற்சி 3 பேருக்கு தர்ம அடி
ADDED : ஜூலை 14, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், எஸ்.கொல்லப்பட்டி, எரங்காட்டை சேர்ந்தவர் ராஜ்-குமார், 48. நேற்று முன்தினம், இரும்பாலை, 3வது கேட் பகு-தியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, 3 பேர் வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர்.
அதிர்ச்சி-யடைந்த அவர் கூச்சலிட்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், 3 பேரையும் பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். பின் இரும்பாலை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், மேட்டூர், பெரியசோ-ரகையை சேர்ந்த மோகன்ராஜ், 34, வீரமணி, 22, விக்னேஷ், 24, என தெரிந்தது. அவர்களை, போலீசார் கைது செய்தனர்.