/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
4 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
/
4 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
ADDED : அக் 30, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சதாசிவபுரத்தில் கருப்பண்ணார், திரவுபதி அம்மன், செல்லியம்மன், அய்யனார் என, அடுத்தடுத்து, 4 கோவில்கள் உள்ளன. அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், 4 கோவில்களின் முன் இருந்த உண்டியல்களை உடைத்து, அதில் இருந்த பணம், காணிக்கை பொருட்களை திருடிச்சென்றனர்.
தொடர்ந்து கோவிலில் இருந்த பித்தளை, வெண்கல மணிகள், பூஜை தட்டுகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர். இதுகுறித்து ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

