ADDED : ஜூலை 27, 2026 12:52 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் சனாதன தர்ம வித்யா பீடம் சார்பில் உலக நன்மைக்காக ஒருங்கிணைந்த ஆனந்த மையம் நிறுவப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக காந்தி சாலை, டி.வி.என்., திருமண மண்டபத்தில் டாக்டர் சந்திரசேகர், இன்று முதல் ஆக., 2 வரை, தினமும் மாலை, 6:15 முதல் இரவு, 8:15 மணி வரை, 'ஸ்ரீமத் பாகவத சப்-தாஹ ஞான யக்ஞம்' சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
அதற்கு முன், விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், ஸ்ரீபாகவத பகவான் ஆரத்தி நடத்தப்படும். ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம செயலர் யதாத்மானந்தர் மகராஜ் தலைமை வகிக்கிறார். ஆக., 2 மாலையில், சேலம் சின்மயா மிஷன் பிரம்மச்சாரி ஸ்ரீஹரிகி-ருஷ்ணன் பங்கேற்கிறார்.
