ADDED : ஜூலை 05, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தெடாவூர் டவுன் பஞ்சாயத்து, தெற்கு மணக்காட்டை சேர்ந்த சுப்ரமணி மனைவி சின்னப்பொண்ணு, 70. இவரது நிலத்தில் விவசாயத்துடன், கால்நடைகளையும் வளர்க்கிறார். நேற்று முன்தினம் இரவு, பட்டியில் ஆடு, மாடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று காலை பார்த்தபோது, 7 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன.
அவர் தகவல்படி, வனத்துறையினர், கெங்கவல்லி போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து கால்நடைத்துறையினர், இறந்த ஆடுகளை உடற்கூராய்வு செய்தனர். மலை அடிவார பகுதி என்பதால், வனவிலங்குகள் கடித்துக்கொன்றதா, தெரு நாய்கள் கடித்துக்கொன்றதா என, விசாரணை நடக்கிறது.