/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருத்துவமனையில் ரகளை ஒருவர் சிக்கினார்
/
மருத்துவமனையில் ரகளை ஒருவர் சிக்கினார்
ADDED : ஆக 08, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், காடையாம்பட்டி, மரக்கோட்டை அருகே ஒண்டிவீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த, 5 இரவு, மது போதையில் இருந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வற்புறுத்தி, சிலர், செவிலியரிடம் தகராறு செய்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினர். இதுதொடர்பாக, 8 பேர் மீது வழக்குப்பதிந்த, தீவட்டிப்பட்டி போலீசார், நேற்று, மேச்சேரி, பொம்மியம்பட்டி காலனியை சேர்ந்த கவுதம், 21, என்பவரை கைது செய்து மற்றவர்களை தேடுகின்றனர்.