sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலீசாரை இடம் மாற்றக்கோரி பா.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்

/

போலீசாரை இடம் மாற்றக்கோரி பா.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்

போலீசாரை இடம் மாற்றக்கோரி பா.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்

போலீசாரை இடம் மாற்றக்கோரி பா.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 06, 2024 03:58 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேச்சேரி போலீசார் மூன்று பேரை, இடம் மாற்றக்கோரி, பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில், இரு தரப்பினர் மீதான வழக்கு தொடர்பாக பேச, பா.ம.க.,வை சேர்ந்த வக்கீல் பகத்சிங், கடந்த மாதம், ஸ்டேஷனுக்கு சென்றார். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பகத்சிங்கை, 3 மணி நேரம் வெளியே விடாமல் ஸ்டேஷனில் இருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் போலீசாரை கண்டித்து, சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க., சார்பில், மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமை வகித்தார்.

இதுகுறித்து சதாசிவம் கூறுகையில், ''எஸ்.எஸ்.ஐ.,க்கள் கோவிந்தராஜ், சுதாகர், தனிப்பிரிவு ஏட்டு வெங்கடேஷ் ஆகியோரை வேறு ஸ்டேஷனுக்கு மாற்ற வேண்டும். போலீசாரை இடம் மாற்றாவிட்டால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us