sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'மக்களுடன் முதல்வர்' திட்ட செலவு அதிகம் அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

/

'மக்களுடன் முதல்வர்' திட்ட செலவு அதிகம் அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

'மக்களுடன் முதல்வர்' திட்ட செலவு அதிகம் அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

'மக்களுடன் முதல்வர்' திட்ட செலவு அதிகம் அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு


ADDED : ஜன 12, 2024 11:58 AM

Google News

ADDED : ஜன 12, 2024 11:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம் வருமாறு:

கவுன்சிலர் ருக்குமணி(அ.தி.மு.க.,): நகராட்சியில், 5 நாள் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்துக்கு, 4.95 லட்சம் ரூபாய் செலவு என, கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதற்கு அதிக தொகை செலவிடப்பட்டுள்ளது.

மேலாளர் கார்த்திகேயன்: ஒவ்வொன்றாக பார்த்து குறைந்த விலையில் வாங்கப்பட்டுள்ளன. இது உத்தேச செலவினம் தான்.

கவுன்சிலர் தனபால் (பா.ம.க.,): குடிநீர் மேல்நிலை நீர்தேக்கதொட்டி பலமுறை கேட்டும் கிடைக்கவில்லை.

நகராட்சி பொறியாளர் பிரேமா: அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் அமைக்கப்படும்.

கவுன்சிலர் சாமுண்டீஸ்வரி(தி.மு.க.,): ஏரிக்கொடியில் தெரு விளக்கு கேட்டு சண்டையிட்டும் இதுவரை பலன் இல்லை.

தலைவர் குணசேகரன்: நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தொடர்ந்து, 33 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. துணைத்தலைவர் தனம், கமிஷனர் சேம் கிங்ஸ்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us