/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சீட்டு நடத்தி மோசடி மேலும் ஒருவர் கைது
/
சீட்டு நடத்தி மோசடி மேலும் ஒருவர் கைது
ADDED : மார் 24, 2025 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கந்தம்பட்டி, மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார், 50. அவரது மனைவி செந்தமிழ்செல்வி, 45. இவர்கள், 2023ல் தீபாவளி பண்டிகைக்கு கவர்ச்சிகர முதலீடு திட்டங்களை அறிவித்தனர். ஏராளமானோர் பணம் செலுத்திய நிலையில் தீபாவளிக்கு முன் தம்பதியர் தலைமறைவாகினர்.
பாதிக்கப்பட்ட மக்கள் புகார்படி, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்த நிலையில், 6 மாதங்களுக்கு பின், நேற்று முன்தினம் தம்பதியை கைது செய்தனர். இதில், 25 லட்சம் ரூபாய் வரை மோசடி உறுதியானது தெரிந்தது. இந்நிலையில் தம்பதியின் மகன் பரத், 26, என்பவரை நேற்று கைது செய்தனர்.