sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி மேலும் ஒருவர் சிக்கினார்

/

'ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி மேலும் ஒருவர் சிக்கினார்

'ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி மேலும் ஒருவர் சிக்கினார்

'ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி மேலும் ஒருவர் சிக்கினார்


ADDED : அக் 09, 2025 01:29 AM

Google News

ADDED : அக் 09, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், 'ரிசர்வ் வங்கி' பெயரை பயன்படுத்தி, இரிடியம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி, சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் ஏராளமானோரிடம், பல கோடி ரூபாய் மோசடி நடந்தது.

இதுகுறித்து, ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் கென்னடி அளித்த புகார்படி, சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் நித்யானந்தம், சந்திரா, அன்புமணி, முத்துசாமி, கேசவன் உள்பட, 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று, திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்த லட்சுமணன்குமார், 29, என்பவரை கைது செய்தனர். கணினி இன்ஜினியரான அவர், ரிசர்வ் வங்கி பெயரில் பல்வேறு ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்து, 11 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து, இரு மொபைல் போன்கள், ஹார்ட் டிஸ்க், பிரின்டர் உள்ளிட்டவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us