/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வார இறுதி நாட்கள், அமாவாசையால் 250 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
/
வார இறுதி நாட்கள், அமாவாசையால் 250 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
வார இறுதி நாட்கள், அமாவாசையால் 250 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
வார இறுதி நாட்கள், அமாவாசையால் 250 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
ADDED : மே 23, 2025 01:30 AM
சேலம்,வார இறுதி நாட்கள், அமாவாசையை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இன்று முதல், வரும், 27 வரை, 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், மேட்டூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஓசூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பதிக்கும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, காஞ்சிபுரத்துக்கும், ஓசூரில் இருந்து சேலம், சென்னை, புதுச்சேரி, கடலுார், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நாமக்கல்லில் இருந்து ஆத்துார், செந்தாரப்பட்டி; ராசிபுரத்தில் இருந்து சென்னை, திருவண்ணாமலை; ஈரோட்டில் இருந்து பெங்களூரு; திருச்சியில் இருந்து ஓசூருக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியர், விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையங்கள், www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் வைகாசி அமாவாசையை முன்னிட்டு, 26ல், சேலம், தர்மபுரியில் இருந்து மேட்டூர், மாதேஸ்வரன் மலைக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை, சித்தர்கோவிலுக்கும் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என, போக்குவரத்து நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்தார்.