/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.3 லட்சம் மதிப்பில் விதைகள் விற்க தடை
/
ரூ.3 லட்சம் மதிப்பில் விதைகள் விற்க தடை
ADDED : ஆக 31, 2025 07:29 AM
சேலம் ; சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா தலைமையில் விதை ஆய்வாளர்கள் குழுவினர், பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, கொங்கணாபுரம் வட்டாரத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்-களில், சமீபத்தில் சோதனை நடத்தினர்.
அதில் முறையான ஆவ-ணமின்றி, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 1,981 கிலோ மதிப்-பிலான மக்காச்சோளம், பருத்தி, நெல் விதைகள் விற்க தடை விதிக்கப்பட்டது. அதன் மதிப்பு, 3.01 லட்சம் ரூபாய்.இதுகுறித்து சித்ரா கூறுகையில், 'தரமான விதைகளை விற்-கவும், விற்கப்படும் விதைக்கு கண்டிப்பாக முளைப்புத்திறன் அறிக்கை, பதிவுச்சான்று வைத்திருக்க, விற்பனையாளருக்கு அறி-வுறுத்தப்படுகிறது. விவசாயிகள், விலை பட்டியலை அவசியம் கேட்டு பெறுவதோடு, அதில், குவியல் எண், காலாவதி தேதி இருப்பதை உறுதிப்
படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

