ADDED : ஜன 02, 2026 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி ஊத்துமேட்டில், மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்க, ஆத்துார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதேபோல் ஆத்துார் நகராட்சி முதலாவது வார்டு, உப்பு ஓடை பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்க, 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இதற்கான பூமி பூஜை விழா நேற்று முன்தினம் அந்தந்த பகுதி-களில் நடந்தது. அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலர்கள் ரஞ்சித்குமார், சேகர், நகர செயலர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

