sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மதுக்கடைகளை அகற்ற பா.ஜ., ஆர்ப்பாட்டம்

/

மதுக்கடைகளை அகற்ற பா.ஜ., ஆர்ப்பாட்டம்

மதுக்கடைகளை அகற்ற பா.ஜ., ஆர்ப்பாட்டம்

மதுக்கடைகளை அகற்ற பா.ஜ., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 10, 2025 07:31 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: பா.ஜ.,வின், சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், புது ரோடு அருகே உள்ள, 3 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி, அதே பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். இதில் மதுவால் கணவரை இழந்ததை குறிப்பிடும்படி, 10 பெண்கள், விதவை கோலத்தில் பங்கேற்றனர்.

தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றதால், போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் பா.ஜ., - போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேற்கு தாசில்தார் மாதேஸ்வரன் பேச்சு நடத்தி, ஓரிரு மாதத்தில் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் மறியலை கைவிட்டனர். பின் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர். கிழக்கு மாவட்ட பார்வையாளர் அண்ணாதுரை, மாவட்ட முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு, வடக்கு ஒன்றிய தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us