sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விசைத்தறி ஜி.எஸ்.டி., தொகை விடுவிக்க மத்திய அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல்

/

விசைத்தறி ஜி.எஸ்.டி., தொகை விடுவிக்க மத்திய அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல்

விசைத்தறி ஜி.எஸ்.டி., தொகை விடுவிக்க மத்திய அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல்

விசைத்தறி ஜி.எஸ்.டி., தொகை விடுவிக்க மத்திய அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல்


ADDED : டிச 29, 2025 09:55 AM

Google News

ADDED : டிச 29, 2025 09:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: பா.ஜ.,வின், நெசவாளர் பிரிவு மாநில செயற்குழு கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. அதற்கு மாநில தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்து, 100 நெசவாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு; 38 பேருக்கு, மத்திய அரசின், இ - பெச்சான் அட்டை; 200 பேருக்கு, மத்திய அரசின் திட்டத்தில் இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார்.

தொடர்ந்து, சேலம், அம்மாபேட்டையில், 34 ஏக்கரில் இயங்கிய கூட்டுறவு நுாற்பாலை, 20 ஆண்டாக செயல்படவில்லை. அங்கு, 'மினி டெக்ஸ்டைல்' பூங்கா நிறுவி, நெசவு தொழிலுக்கு புத்துயிர் ஊட்டுதல்; விசைத்தறி நெசவாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி., தொகை, பல ஆண்டாக நிலுவையில் இருப்பதால், அவர்கள் தொடர்ந்து தொழில் செய்வது கேள்விக்குறியாகி வருகிறது. அதனால் அத்தொகையை உடனே விடுவிக்க, மத்திய நிதியமைச்சர் நடவடிக்கை எடுத்தல்; மத்திய அரசின் மின்னணு ஜாக்கார்டுகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கி, நெசவாளர்களின் தேவையை மத்திய அரசு பூர்த்தி செய்தல் என்பன உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் படம் திறக்கப்பட்டு, அவரது புகைப்பட கண்காட்சி நடந்தது. மாநில செயலர்கள் செல்வம், ஐயப்பராஜ், சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், மாநகர் தலைவர் சசிகுமார், மண்டல தலைவர் காளிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us