ADDED : ஆக 11, 2025 08:22 AM
சேலம்: சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள ஐயப்பன் பஜனை மண்டலி அன்னதான டிரஸ்ட் தர்மசாஸ்தா ஆசிரமத்தில், கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு, 14ம் ஆண்டாக, 7 நாட்கள் நடக்கும் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ ஞான யக்ஞம் மற்றும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நேற்று தொடங்கியது.
தினமும் காலை, 6:30 முதல், 11:30 வரை ஸ்ரீமத் பாகவதம் மூல பாராயணம்; மாலை, 4:30 முதல், 6:30 வரை தோடாய மங்களம், அஷ்டபதி பாராயணம்; மாலை, 6:30 முதல், 7:30 வரை, கலா ரவி ராமசர்மா குழுவினரின் கோவிந்த சதகம், உபன்யாசம்; இரவு, 7:30 மணிக்கு திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.
நேற்று கடையநல்லுார் ராஜகோபால் தாஸ் பாகவதர் குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது. இன்று பரனுார் அகில பாரத சாது சங்கம் யக்ஞ ராம சர்மா; நாளை கடலுார் கோபி; 13ல் மேலார் கோடு ரவி; 14ல் கோவிந்தபுரம் விட்டல்தாஸ் மகராஜ் சிஷ்யர் கோபால்தாஸ்; 15ல் சென்னை நாகராஜ பாகவதர் குழுவினர், 17ல் சேலம் ஸ்ரீகிருஷ்ண சைதன்ய பஜனை மண்டலி குழுவினர், உள்ளூர், வெளியூர் பாகவதர்களின் நிகழ்ச்சி நடக்கிறது.