/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.100 கோடி மோசடி தம்பதி காவல் நீட்டிப்பு
/
ரூ.100 கோடி மோசடி தம்பதி காவல் நீட்டிப்பு
ADDED : ஜூன் 14, 2025 06:37 AM
சேலம்: சேலம், அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை பெயரில், 100 கோடி ரூபாய் மோசடி நடந்துள்-ளது. இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 54, அவரது மனைவி கரோலின் ஜான்சி-ராணி, 47, ஆகியோரை, கடந்த, 3ல், சேலம் பொருளாதார குற்-றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஜாமின் மனு, கடந்த மே, 19ல் தள்ளுபடி செய்து, கோவை டான்பிட் நீதி-மன்றம் உத்தரவிட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜர்ப-டுத்தப்பட்ட தம்பதிக்கு, 15 நாட்களுக்கு காவலை நீட்டித்து, நீதி-மன்றம் உத்தரவிட்டது. இதனால் கோவை மத்திய சிறையில், மீண்டும் அடைக்கப்பட்டனர். அதேநேரம் தம்பதி சொத்து விப-ரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், செந்தில்-குமாரிடம் ஏமாந்து விடுபட்டவர்கள், உடனே புகார் அளிக்கும்-படி கேட்டுக்கொண்டுள்ளனர்.