/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ் ஏறியதில் மகள் பலி தாய் உள்பட 3 பேர் காயம்
/
பஸ் ஏறியதில் மகள் பலி தாய் உள்பட 3 பேர் காயம்
ADDED : ஆக 29, 2025 01:47 AM
சேலம், :சேலம், கருப்பூர், தட்டாஞ்சாவடியை சேர்ந்த, சீனிவாசன் மனைவி தமிழ்செல்வி, 45. இவர், தாய் மாதேஸ்வரி, 65, என்பவருடன், நேற்று காலை, 8:30 மணிக்கு, கரும்பாலை அருகே, சேலம் -தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை நடந்து, கடக்க முயன்றனர்.
அப்போது, சேலம் நோக்கி வந்த பைக் மோதியதில், பைக்கில் வந்த இரு வாலிபர்கள் உள்பட, 4 பேரும் சாலையில் விழுந்தனர். அந்த நேரத்தில் தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ், 4 பேர் மீதும் மோதியது.
இதில் பஸ் ஏறியதில் உடல் நசுங்கி, தமிழ்செல்வி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மாதேஸ்வரி, பைக்கில் வந்த, கோட்டமேட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்தி, 24, படுகாயம் அடைந்தது, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின் மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் பைக்கில் வந்த மற்றொருவர் வினோத், 23, லேசான காயத்துடன், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

