sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காதல் கணவனை மீட்டுத்தர மாற்றுத்திறனாளி பெண் மனு

/

காதல் கணவனை மீட்டுத்தர மாற்றுத்திறனாளி பெண் மனு

காதல் கணவனை மீட்டுத்தர மாற்றுத்திறனாளி பெண் மனு

காதல் கணவனை மீட்டுத்தர மாற்றுத்திறனாளி பெண் மனு


ADDED : நவ 25, 2025 01:42 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் அரிசிப்பாளையம், மல்லிசெட்டி தெருவை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி, 21; காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர், தன் தாய் விஜயா மற்றும் ஒருமாத ஆண் குழந்தையுடன் வந்து, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

சேலம் மணியனுாரில் உள்ள, என் தாத்தா வீட்டுக்கு அடிக்கடி சென்றபோது, அங்குள்ள சாமுண்டி தெருவை சேர்ந்த வாலிபர் சிவானந்தம், 21, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தோம். கடந்தாண்டு மார்ச்சில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. கடந்த மாதம் சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையை பார்க்க சிவானந்தம் ஒருமுறை கூட வரவில்லை. மேலும், எனது மொபைல்போனுக்கு, திருப்பூரில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட வீடியோவை அனுப்பி, இனி குழந்தையை பார்க்க வரமாட்டேன் என தகவல் அனுப்பி உள்ளார். எனவே, கணவரை மீட்டு என்னுடன் வாழ வைக்க மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us