sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மருத்துவமனைக்கு சென்றபோது ஏமாற்றம் பா.ம.க., - எம்.எல்.ஏ., போராட்டம்

/

மருத்துவமனைக்கு சென்றபோது ஏமாற்றம் பா.ம.க., - எம்.எல்.ஏ., போராட்டம்

மருத்துவமனைக்கு சென்றபோது ஏமாற்றம் பா.ம.க., - எம்.எல்.ஏ., போராட்டம்

மருத்துவமனைக்கு சென்றபோது ஏமாற்றம் பா.ம.க., - எம்.எல்.ஏ., போராட்டம்


ADDED : மார் 14, 2024 01:17 AM

Google News

ADDED : மார் 14, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், மேட்டூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த, 11ல், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், மாவட்ட ஒருங்கிணைந்த ஆய்வு மையத்தை, முதல்வர் ஸ்டாலின், தர்மபுரியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று மாலை, பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், அக்கட்சியின் நகர நிர்வாகிகள், மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு சென்றனர்.

அப்போது புறநோயாளிகள் பிரிவில் ஒரு மருத்துவர் மட்டும் இருந்த நிலையில், ஊழியர்கள் இல்லாததால் ஒருங்கிணைந்த ஆய்வகம் மூடப்பட்டிருந்தது. ஏமாற்றம் அடைந்த எம்.எல்.ஏ., மருத்துவமனை நுழைவாயில் முன் மாலை, 6:45 மணிக்கு, பா.ம.க., நிர்வாகிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மருத்துவ அலுவலர் இளவரசி, மேட்டூர் போலீசார் பேச்சு நடத்தியும் பலனில்லை. இரவு, 7:30 மணிக்கு சேலம் இணை இயக்குனர் பழனிசாமி(ஊரக நல பணி) வந்ததும், போராட்டத்தை எம்.எல்.ஏ., கைவிட்டார். பின், 'மாலை நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் பாதிக்கின்றனர். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எம்.எல்.ஏ., வலியுறுத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் கூறியதால், எம்.எல்.ஏ., புறப்பட்டார்.






      Dinamalar
      Follow us