sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் 'அட்மிட்':வீடு திரும்பிய பின் பலியால் விசாரணை

/

கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் 'அட்மிட்':வீடு திரும்பிய பின் பலியால் விசாரணை

கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் 'அட்மிட்':வீடு திரும்பிய பின் பலியால் விசாரணை

கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் 'அட்மிட்':வீடு திரும்பிய பின் பலியால் விசாரணை


ADDED : நவ 03, 2025 02:22 AM

Google News

ADDED : நவ 03, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம், கொண்டலாம்பட்டி அருகே பூலாவரியை சேர்ந்த, மெக்கானிக் பழனிவேலு, 60. இவருக்கும், உறவினரின் மகன் சிவாவுக்கும், கடந்த அக்., 25ல் சொத்து பிரச்னையில் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சிவா, கட்டையால் பழனிவேலுவை தாக்கினார். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த, 27ல் வீடு திரும்பினார். ஆனால் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து பழனிவேலுவின் மகன் யுவராஜ் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்தான், கட்டையால் தாக்கியதில் இறந்தாரா, உடல்நலக்

குறைவால் இறந்தாரா என்பது தெரிய வரும் என, போலீசார் தெரிவித்தனர். அதன்படி வழக்கின் தன்மை மாறும் என்றும், போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us