sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கல்லறை திருநாள் அனுசரிப்பு

/

கல்லறை திருநாள் அனுசரிப்பு

கல்லறை திருநாள் அனுசரிப்பு

கல்லறை திருநாள் அனுசரிப்பு


ADDED : நவ 03, 2025 02:21 AM

Google News

ADDED : நவ 03, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:கல்லறை திருநாளை ஒட்டி, சேலம், குழந்தை இயேசு பேராலயம் எதிரே உள்ள கல்லறை தோட்டத்தில், நேற்று ஏராளமான கிறிஸ்தவர்கள் குவிந்தனர். அவர்கள், அவரவர் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, அவர்கள் ஆன்மா சாந்தி பெற பிரார்த்தனை செய்தனர். முன்னோர்களின் பிடித்த உணவு பொருட்களை படைத்தும், குடும்பத்துடன் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அதேபோல் நெத்திமேடு ஜெயராணி பள்ளி எதிரே உள்ள கல்லறை தோட்டம், மரவனேரி சி.எஸ்.ஐ., ஜான்சன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள், முன்னோர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

மேட்டூர் அடுத்த மாசிலாபாளையம் புனித ஜெபஸ்டியார் ஆலய பங்கு மக்கள், முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைகளை வண்ணம் தீட்டி மலர்களால் அலங்கரித்தனர். ஜெபஸ்டியார் ஆலய பங்குதந்தை லுார்துசாமி தலைமையில் பலர், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைந்த சிறப்பு ஜெபம் செய்தனர்.

ஏற்காடு ஆர்.சி., தேவாலயத்தில் சிறப்பு திருப்பலியை தொடர்ந்து, கோவில் மேடு கல்லறை தோட்டத்தில் திருப்பலி நடந்தது. அப்போது முன்னோர்களின் கல்லறையில் மாலை போட்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us