ADDED : டிச 28, 2025 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூரைச் சேர்ந்தவர் அங்கமுத்து, 70. நேற்று மாலை, 6:30 மணிக்கு, முத்துமலை முருகன் கோவில் முன், சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, ஆத்துார் நோக்கி சென்றுகொண்டி-ருந்த சரக்கு வாகனம், அங்கமுத்து மீது மோதி-யது. இதில் படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வழியில் உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார், சரக்கு வாகன டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.

