ADDED : நவ 28, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல், ந தலைவாசல் அருகே நாவலுாரை சேர்ந்த அம்பாயிரம் மனைவி செலத்தாள், 79. நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு வேப்பம்பூண்டி மேடு பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார்.
அப்போது தலைவாசலில் இருந்து வீரகனுார் நோக்கி வந்த டேங்கர் லாரி, செலத்தாள் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு
ஆத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

