/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
ADDED : அக் 15, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜலகண்டாபுரம், ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்துாரை சேர்ந்தவர் சுப்ரமணி, 50. எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்தார். இவருக்கு மனைவி மாதம்மாள், 48, ஒரு மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் மதியம், முசுரன் காட்டுவளவில் மின்தடை ஏற்பட, அங்கு சென்ற சுப்ரமணி, மின்மாற்றியை அணைக்காமல், 'பீஸ்' போட முயன்றார். அப்போது மின் கம்பியில் கை பட்டதில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மாதம்மாள் புகார்படி, ஜலகண்டாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.