/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழில் முனைவோர் புத்தாக்கம் ஓராண்டு பயிற்சிக்கு அழைப்பு
/
தொழில் முனைவோர் புத்தாக்கம் ஓராண்டு பயிற்சிக்கு அழைப்பு
தொழில் முனைவோர் புத்தாக்கம் ஓராண்டு பயிற்சிக்கு அழைப்பு
தொழில் முனைவோர் புத்தாக்கம் ஓராண்டு பயிற்சிக்கு அழைப்பு
ADDED : செப் 21, 2024 06:51 AM
சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம், அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவ-னத்துடன் இணைந்து தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் எனும் ஓராண்டு சான்றிதழ் படிப்பை, அக்., 14ல் தொடங்க உள்-ளது. அதற்கான நேர்காணல் இம்மாத இறுதியில் நடக்க உள்-ளதால், பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் செயல்முறை தற்போது நடக்கிறது.
கட்டணம், 80,000 ரூபாய். அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ., 10, பிளஸ் 2 முடித்திருப்பதோடு, தொடர்புடைய பயிற்சியில், 2 ஆண்டு அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர். இதில் பயன்பெற, https://oneyearcourse.editn.in/ என்ற
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோரில் ஆர்வமுள்ளவர்கள், இந்த ஓராண்டு சான்றிதழ்
படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.