/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர்நிலையில் காலாவதி மாத்திரையால் ஆபத்து
/
நீர்நிலையில் காலாவதி மாத்திரையால் ஆபத்து
ADDED : ஏப் 14, 2025 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம், பெரிய ஏரி, 156 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது, 100 ஏரி திட்டத்தில் நிரம்பியதால், பொத்தியாம்பட்டியில் அமரகுந்தி சாலை இருபுறமும் தண்ணீர் உள்ளது. அப்பகுதி நீர்நிலையில் ஏற்கனவே மக்கள் இறைச்சி கழிவு, தேவையற்ற பொருட்களை கொட்டுவதால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் சாலை ஓரம் தமிழக அரசின் காலாவதி மாத்திரைகள், பாலிதீன் பையில் கொட்டப்பட்டிருந்தன. கால்நடைகள் சாப்பிடும்போது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நீர்நிலைகளில் கலந்து தண்ணீர் மாசடையும். அதனால் காலாவதி மாத்திரைகள் கொட்டுவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

